News

Parents Teachers Association Meeting (PTA)

பெற்றோர் ஆசிரியர் கழகம்

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் வேண்டுதலுக்கு இணங்க நமது பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது ஒவ்வொரு ஆண்டும் 10 11 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 4 முறை பெற்றோர்-ஆசிரியர் கலந்துரையாடல் கூட்டமும் பிற வகுப்பு மாணவர்களுக்கு தேவைக்கேற்ப இரண்டு அல்லது ஒரு முறை கலந்துரையாடல் கூட்டமும் நடைபெற்று வருகிறது. இந்த அமைப்பிற்கு ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு ஆண்டிற்கு மூன்று முறை கூடி அந்த ஆண்டின் செயல்பாடுகளையும் தேவைக்கேற்ப மாணவர்களின் நலம் பயக்கும் செலவினங்களையும் திட்டமிட்டு தீர்மானங்களையும்
நிறைவேற்றி சிறப்பான விதத்தில் பள்ளிக்கு உதவியாகவும் மாணவர்களின் வளமான வளர்ச்சிக்கு வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருகிறது.